Monday 11 June 2012

குழந்தைத் தொழிலாளர்கள்





Foe;ijj; njhopyhsHfs;
 
 
 
 

 







அது ஒரு காலை நேரம், குடும்பம் ஒன்றில் தற்காலிகமாக இருந்த சிறுமி ஒருத்தி ஒரே ஒரு ஆடையினை கையில் ஏந்திக்கொண்டு, அதனை மாடியில் உள்ள கொடியில் உலர்த்தும் வண்ணம் வந்தாள். கையிலி இருந்த ஆடையிலிருந்து நீர்ச் சொட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தது. அது அவள் எங்கருந்து வருகிறாள் என்பதையும் காட்டிக்கொடுக்கும் பாதையாகிக்கொண்டிருந்தது. அந்த சிறுமி தனது கையிலிருந்த அந்த ஒரே ஒரு ஆடையினை மெல்ல அழகாக கொடியில் உலர்த்துவதற்காக விரித்துக்கொண்டிருந்தாள். அந்த ஆடைக்கு அவள் கொடுக்கும் மதிப்பு, அவளது விரல் அதனை விரிப்பதில் தெரிந்தது. ஆடையினை உலர்த்திய பின்னர் சென்றுவிட்டாள் அச்சிறுமி. நானோ அந்த ஆடையினைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன், சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த என் கண்ணை மேலும் ஓர் காட்சி கவ்விக்கொண்டது.
 
ஆம், அந்த ஆடையிலிருந்து விழுந்துகொண்டிருந்த நீர்த்திவலைகளினால் கீழே ஏதோ ஒரு உருவம் உருவாக்கப்பட்டதைப் போன்று உணர்ந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் தொடர்ந்து அதனையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அது வலப்புறமிருந்து இடப்புறம் புரட்டிப்போட்ட இந்தியாவைப் போன்றதோர் தோற்றத்தைக் கொடுத்தது. மீண்டும் அந்த ஆடையினைப் பார்த்தேன் அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாய் அந்த இந்திய படத்தின் மேல் விழுந்துகொண்டிருந்தது. அது அந்த ஆடையிலிருந்து இந்தியாவின் மேல் விழும் கண்ணீர்த் துளிகளாய் தோன்றியது எனக்கு. ஆம், இந்தியாவில் இன்னும் நாங்கள் அழுதுகொண்டுதான் இருக்கிறோம் என்பதையே எனக்கு செய்தியாய் சொல்லியது அந்தக் காட்சி. அவ்விடம் விட்டு நான் கடந்து வந்தபின்னர், தொடர்ந்து விழுந்துகொண்டிருந்த  தண்ணீர் துளிககளால் இந்தியாவின் உருவம் இன்னும் சற்று நேரத்திற்குள் மாறிவிடும் என்ற சோகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன்.  
 
 

No comments:

Post a Comment